"தெய்வப் புலவர்" திருவள்ளுவர் இயற்றிய
"உலகப் பொதுமறை" திருக்குறள்
⭘.◠.◡.◠.◡.◠.◡.◠.◡.◠.◡.◠.⭘
முகப்புரை
திருக்குறள், சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்கள் திரட்டிற்குட்பட்டதாகும்.
இது ஈரடிகளில் எழுசீர் கொண்ட குறள் வெண்பா வகையினாலான குறட்பாக்களைக் கொண்டது.
திருக்குறள் 133 அதிகாரங்களாகவும், ஒவ்வொரு அதிகாரமும் 10 செய்யுட்பாக்கள் வீதம், ஆக 1,330 செய்யுள்களைக் கொண்டது.திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பால் பகுப்புகளாக அமையப்பெற்றது.
திருக்குறள் உலகெங்கிலும் கடைப்பிடிக்க வேண்டிய மானுடவியலின் அறநெறிகளை நீக்கமற வலியுறுத்தியும் வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் பகுத்துச் சொல்லப்பட்ட மிகவும் தொன்மையான படைப்பாகும். திருக்குறள் பொதுத் தன்மையோடு மதச்சார்பற்ற வகையிலான படைப்பாகக் கருதப்படுகிறது.
ஓலைச் சுவடியில் எழுதப்பட்டிருந்த திருக்குறள் அச்சில் கொணரப்பட்ட ஆண்டு 1812.
திருக்குறளுக்கு முதன் முறை உரை எழுதியவர் மணக்குடவர். திருக்குறளில் குறிப்பறிதல் எனும் தலைப்புடைய இரண்டு அதிகாரங்கள் உள்ளன. அவையாவன;
பொருட்பாலில் அதிகாரம் 71 மற்றும் இன்பத்துப்பாலில் அதிகாரம் 110.
திருக்குறளை முதல் முறையாக பிற மொழியில் மொழி பெயர்த்தவர், வீரமா முனிவர்.திருக்குறளை முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர், G.U.போப் ஆவார்.
முப்பால்களும் குறள்களும்1. அறத்துப்பால் (38 அதிகாரங்கள்)
1. பாயிரம் 1-4
2. இல்லறவியல் 5-24
3. துறவறவியல் 25-37
4. ஊழியல்
382. பொருட்பால் (70 அதிகாரங்கள்)
1. அரசியல் 39-63
2. அமைச்சியல் 64-73
3. அரணியல் 74-75
4. கூழியல் 76
5. படையியல் 77-78
6. நட்பியல் 79-95
7. குடியியல் 96-108
3. இன்பத்துப்பால் (25அதிகாரங்கள்)
1. களவியல் 109-120
2. கற்பியல் 121-133
எல்லாத் தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறப்பு மிக்க குணநலன்களால் தான் திருக்குறள் உலகில் பொது மொழியான ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளது.
இன்று வரையிலும் உலகெங்கிலும் தமிழ் மொழியில் புகழ் பெற்ற ஒரே நூலாகத் திகழ்ந்து வருகின்றது என்றால் அது மிகையில்லை.
நன்றி நவிலல்
