அதிகாரம் #75 அரண்
(ஒரு நாட்டின் பாதுகாப்பு அமைப்பு)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 741-750
741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
பகைவர் மீது படையெடுத்துச் செல்லும் அரசர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சி புகலிடம் தேடுவோர்க்கும் கோட்டை என்பது சிறந்ததாகும்.
742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
743
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
744
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
747
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
748
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
No comments:
Post a Comment