இயல்: 11. குடியியல்
1011
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
ஒருவர் தன் இழிசெயலுக்காக நாணுதல் என்பதே நாணம் ஆகும்; அழகிய நெற்றி கொண்ட நல்ல பெண்களின் இயல்பான நாணங்கள் என்பவை வேறு வகையிலானவை ஆகும்.
1012
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
உணவு உடை உள்ளிட்ட மற்றைய யாவும் மனிதர்க்கான பொதுவான தேவையான அம்சங்களாகும்; ஆனால், மனிதர்க்குரிய சிறப்புமிகும் தேவை, பிறர் பழிக்கும்படியான செயல்களைத் தவிர்த்து வாழ்வதற்குரிய தலையாய பண்பான நாண் உடைமையே ஆகும்.
1013
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
உஒஉ
1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
1020
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
No comments:
Post a Comment